Pages

Wednesday, January 30, 2013

Sorgathin Vasapadi - சொர்க்கத்தின் வாசப்படி - Lyrics


படம் : உன்னை சொல்லி குற்றமில்லை
பாடியவர் : K.J. யேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
ஆண்  :
பெண் :
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித்துளியே

சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்

உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
சிற்றன்னவாசலின் ஓவியமே சிந்தைக்குள் ஊறிய காவியமே

எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்

மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே

சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்,

மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய்
மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்

கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ

கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன் நீயென்னை ஆளுகிறாய்

சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி.!
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!