Pages

Thursday, June 2, 2011

Vanna Nilave Vaikai (வண்ண நிலவே வைகை நதியே) - Lyrics

படம் : பாடாத தேனீக்கள்
பாடியவர் : K.J. யேசுதாஸ்
இசை : இளையராஜா

வண்ண நிலவே வைகை நதியே
சொல்லி விடவா எந்தன் கதையே
ஏட்டில் இல்லாதது என் கதைதான்
யாரும் சொல்லாதது என் நிலைதான் (வண்ண)......

மான் ஒன்று துள்ளி தான் வாழ்ந்த வீடு
ஆண் சிங்கம் ஒன்று அரசாண்ட காடு
அம்மாடி அதுதான் பொல்லாதது
ஆனாலும் மான் மேல் அன்பானது
கல்யாண மாலைதான் மான் போடா
சந்தோஷ ஊஞ்சலில் சேர்ந்தாட
பாயும் சிங்கம் கூட
பழைய வாழ்க்கை மாற (வண்ண)......

தான் போன போக்கில் போகாது சிங்கம்
மான் போட்ட கோட்டை தாண்டாது என்றும்
பெண் மானின் நெஞ்சம் நம்பாதது
சந்தேகம்தான் இங்கு உண்டானது
முல் மீது நான் தூங்கும் கோலம்தான்
முன்நாளில் நான் செய்த பாவம்தான்
மானுக்காக வாடும்
மனதும் ஏங்கி படும் (வண்ண).......

No comments:

Post a Comment

Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!