Pages

Saturday, August 31, 2013

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம் Lyrics

ஆரம்ப இசை பல்லவி ஆண் :

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாaழை மரம்               (
வாங்கி)

இளம் வாழந் தண்டு முள்ளானதா என் கைகள் தீண்ட விறகானதா
அழுதாலும் தொழுதாலும் வழியே கிடையாதா


(வாங்கி)


(இசை) சரணம் - 1 ஆண் :

பாய் போட்டு வச்சிருக்கு நீ இல்லாம பாலும் பாழானது
என் மேல குத்தமில்ல வா கண்ணம்மா உறங்கி நாளானது
அன்று சொன்ன வார்த்தை மெய்யில்லை பெண்ணே
இன்று சொல்லும் வார்த்தை பொய்யில்லை கண்ணே
வழி விட்டுக் கொடுக்க வாய் விட்டு அழுதேன்
விரல் என்னை வெறுத்தால் இந்த நகம் எங்கு போவேன்


(வாங்கி)

(இசை) சரணம் - 2 ஆண் :

பொம்பிளைக கண்ணீர் விட்டா ஊர் தாங்காது பூமி ரெண்டாகுமே
ஆம்பிளைக கண்ணீர் விட்டா யார் கேட்பாக இல்லை அனுதாபமே
கார்த்திகை போனால் மழை இல்லை மானே
கருணையும் போனால் வாழ்வில்லை தானே
உந்தன் மனம் கரும்பா இல்லை அது இரும்பா
வெண்ணிலவும் இருக்க இங்கு இருளோடு வாழ்வா

வாங்கி வந்தேன் ஒரு வாழை மரம்
வந்தப் பின்னே அது தாழை மரம்

Tuesday, July 9, 2013



பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்.... 


பெண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....)  (2)

              நீ வரும் நேரம் வானவில் கோலம்

              வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே


பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்


ஆண்  : (ரோஜாவின் மின்னல்கள்

               உனதழகினை படம் வரைந்திட

பெண் : தாலாட்டும் உன் கண்கள்

                மனம் முழுவதும் மழை பொழுந்திட )  (2)

ஆண்  : அணை நீரில் நதி ரெண்டும் சேரும்

பெண் : நிலவினை ரசித்தபடி பனியினில் நனைந்த கொடி   (2)

              நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்

ஆண்  : நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்


பெண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....)  (2)

              நீ வரும் நேரம் வானவில் கோலம்

              வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே


பெண் : செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்


ஆண்  : கல்யாண ராகங்கள்

              துள்ளும் மன இசையில்  வர

பெண் : சங்கீத  சிறகோடு

              இரு  பறவைகள்  மனம்  இன்னைந்திட )  (2)

ஆண்  : செவ்வாழை  தோட்டங்கள்  வாழ்த்தும்

பெண் : சந்தன  பூங்கிளையில் அன்பினை பாடும் குயில்  (2)

              வானத்தை விலையாக கேட்கும்

ஆண்  : வானத்தை விலையாக கேட்கும்


பெண் : (செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....)  (2)

              நீ வரும் நேரம் வானவில் கோலம்

              வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே


ஆண்  : (செவ்வந்தி பூவெடுத்தேன்

              அதில் உன் முகம் பார்த்திருந்தேன்....)  (2)

              நீ வரும் நேரம் வானவில் கோலம்

              வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே





Saturday, June 29, 2013



வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
உன் நினைவில் என் நினைவே சொர்க்கம் தானம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா...

வெண்ணிலவே வெண்ணிலவே வெண்ணிக்கோலமா
அத்தை மகள் ஆசையிலே தொட்ட நாணமா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா...

(வெண்ணிலவே)

வெள்ளிப்பனி மேகங்கள் செல்லும் ஊர்கோலங்கள்
அவள் பாதத்தில் எனைச் சேருங்கள்
அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள்
காதல் தீவுக்கு வழிகாட்டுங்கள்
நெஞ்சில் அலை மோதும் கடல் போல ஓசை
வந்து கரையேரும் அலைக்கென்ன ஆசை
இன்ப மயக்கம் என்ன? சின்னத் தயக்கம் என்ன?
இந்தக் காலங்கள் தனிக்கோலங்கள் ஹோ...

(வெண்ணிலவே)

ஒரு புல்லாங்குழல் பாடும் தனிராகங்கள்
உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா
அந்த சுரம் பாடினால் தொட்டுச் சுகம் தேடினால்
கன்னி மாடத்தில் குளிர் காலமா
நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம்
புத்தம் புதுப் பார்வை புரியாத ஏக்கம்
ரத்த நாளங்கலில் ஓடும் தாளங்கலில்
ஒரு தாலாட்டுத்தான் பாடுமா...

வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா
உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில் நீராட வா... 

படம்     : காலமெல்லாம் காதல் வாழ்க
இசை    : தேவா 



Saturday, April 6, 2013

படம் : அண்ணாமலை
இசை : தேவா
குரல் : கே.ஜே.யேசுதாஸ் 
ஒரு பெண்புறா
கண்ணீரில் தள்ளாட என்னுள்ளம் திண்டாட
என்ன வாழ்க்கையோ..!
சுமைதாங்கி சுமையானதே..!
எந்தன் நிம்மதி போனதே...!
மனம் வாடுதே

(ஒரு பெண்புறா...)

கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன்
தூக்கம் கண்ணைச் சொக்குமே அது அந்தக்காலமே..!
மெத்தைவிரித்தும் சுத்தப் பன்னீர்த் தெளித்தும்
கண்ணில் தூக்கம் இல்லையே அது இந்தக்காலமே..!
என் தேவனே ஓ தூக்கம் கொடு..!
மீண்டும் அந்த வாழ்க்கைக் கொடு..!
பாலைவனம் கடந்து வந்தேன்
பாதங்களை ஆற விடு

(ஒரு பெண் புறா...)

கோழி மிதித்து ஒருகுஞ்சு சாகுமா
அன்று பாடம் படித்தேன் அது பழைய பழமொழி
குஞ்சு மிதித்து இந்தகோழி நொந்ததே
இதை நெஞ்சில் நிறுத்து இது புதிய பழமொழி
ஆண்பிள்ளையோ சாகும்வரை..!
பெண்பிள்ளையோ போகும்வரை..!
விழியிரண்டும் காயும்வரை..!
அழுதுவிட்டேன் ஆனவரை..!

(ஒரு பெண் புறா...) 

Wednesday, January 30, 2013

Sorgathin Vasapadi - சொர்க்கத்தின் வாசப்படி - Lyrics


படம் : உன்னை சொல்லி குற்றமில்லை
பாடியவர் : K.J. யேசுதாஸ்
இசை : இளையராஜா
வரிகள் : வாலி
ஆண்  :
பெண் :
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சின்னமலர்க் கொடியே நெஞ்சில் சிந்தும் பனித்துளியே

சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்

உன்னாலே உண்டாகும் ஞாபகங்கள் ஒன்றிரண்டு அல்லவே
ஒன்றுக்குள் ஒன்றான நீரலைகள் என்றும் இரண்டல்லவே
சிற்றன்னவாசலின் ஓவியமே சிந்தைக்குள் ஊறிய காவியமே

எங்கே நீ அங்கேதான் நானிருப்பேன்
எப்போதும் நீயாடத் தோள் கொடுப்பேன்

மோகத்தில் நான் படிக்கும் மாணிக்க வாசகமே
நான் சொல்லும் பாடலெல்லாம் நீ தந்த யாசகமே

சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நான் உனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே

சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
உன்னாலே நான் கொண்ட காயங்களை முன்னும் பின்னும் அறிவேன்
கண்ணாலே நீ செய்யும் மாயங்களை இன்றும் என்றும் அறிவேன்,

மின்சாரம் போலெனைத் தாக்குகிறாய்
மஞ்சத்தைப் போர்க்களம் ஆக்குகிறாய்

கண்ணே உன் கண்ணென்ன வேலினமோ
கை தொட்டால் மெய் தொட்டால் மீட்டிடுமோ

கோட்டைக்குள் நீ புகுந்து வேட்டைகள் ஆடுகிறாய்
நானிங்கு தோற்றுவிட்டேன் நீயென்னை ஆளுகிறாய்

சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
பெண்ணல்ல நீயெனக்கு வண்ணக் களஞ்சியமே
சிந்தும் பனித்துளியே என்னைச் சேரும் இளங்கிளியே
சொர்க்கத்தின் வாசப்படி எண்ணக் கனவுகளில்
சொர்க்கத்தின் வாசப்படி.!
Earn upto Rs. 9,000 pm checking Emails. Join now!