
படம்: அலிபாபாவும் 40 திருடர்களும்
இசை: தக்ஷ்ணமூர்த்தி
பாடியவர்: பானுமதி
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே
பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ( மாசிலா )
உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே….
மாறுமோ………….
No comments:
Post a Comment