
படம்: இதயக்கோயில்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்.. (2)
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்...
பாழான நாடி என்று பார்த்தவர்கள் கூறவில்லை... (2)
தேனாக பேசியதும் சிரித்து விளையாடியதும்
விணாக போகுமென்று யரேனும் நினைக்கவில்லை
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்..(2)
ஆற்றங்கரை ஒரத்திலே யாருமற்ற நேரத்திலே விற்றிருந்த..
மணல் பரப்பு வேதனையை தூண்டுதடி
பூத்திருந்த மலர் எடுத்து பூங்குழலில் சூடி வைத்து
பார்த்திருந்த கோலம் எல்லாம் பழங்கதையானதடி
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்
நானிருந்து வாடுகின்றேன் நா வரண்டு பாடுகின்றேன்.
வானுயர்ந்த சோலையிலே....
No comments:
Post a Comment